• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மறைந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

January 29, 2019 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 88. கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1998-2004 வரை ராணுவ அமைச்சராக பதவி வகித்தார். விபி சிங் பிரதமராக இருந்த போது பெர்னாண்டஸ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் நடந்தது. கார்கில் போரை சிறப்பாக கையாண்டதால் பலரது பாராட்டுகளை பெற்றார். மேலும் இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போதுதான் இந்தியா பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இதற்கிடையில், சமீபகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது. இந்நிலையில், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, இவரது மறைவிற்க்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி இல்லத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க