• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருதமலை கோவில் அடிவாரத்தில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

July 16, 2020 தண்டோரா குழு

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பிரசித்தி பெற்ற மருதமலை கோவில் அடிவாரத்தில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கருப்பர் கூட்டம்’என்ற யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை,ஆபாசமாக சித்தரித்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற மருதமலை திருக்கோவில் அடிவாரத்தில் கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகள் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்திரித்தவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்து முன்னனியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா பேசுகையில்,அருவருக்கத்தக்க வகையிலும்,ஹிந்துக்களின் மனம் புண்படும் படியாகவும்,பதிவை வெளியிட்டுள்ளவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க