July 20, 2019
மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தமிழகத்தில் அழிந்து வரும் மரங்களினால் மழையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாவதுடன் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படுகிறது .இதனை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரங்களை பாத்துக்க வேண்டும் என்று அன்னை வொயிலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி கோவை சுப்ரமணிப்பாளையத்தில் நடைபெற்றது.
இதில்,1000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்ட இந்த மாரத்தான் போட்டி 3கிலோ மீட்டர்,5கிலோ மீட்டர், 7கிலோ மீட்டர் என மூன்று பிரிவிகளில் பள்ளி மைதானத்தில் தொடங்கிய ஓட்டம் தடாகம் சாலை வழியாக kng புதூர் வரை சென்று மீண்டும் பள்ளி மைதானத்தை வந்தடைந்து.இதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.