• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மயில் வேட்டையாடிய இருவர் கைது

September 11, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் மயில் வேட்டையாடிய இருவரை சிறுமுகை வனத்துறையினர் கைது செய்தனர்.

சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை அடுத்த தேன்கல் பாறை கரடு அருகில் உள்ள பட்டா நிலத்தில் வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்ற போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மயில் வேட்டையாடியது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யபட்டனர். அந்த இருவரின் பெயர்கள் ரவி மற்றும் வெள்ளியங்கிரி ஆகும். அவர்களிடம் இருந்து இரண்டு மயில்களின் உடல்கள், ஹெட்லைட், இரு சக்கர வாகனம், அரை டப்பா கரு மருந்து, பால்ரஷ் குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க