• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மன்னிப்பு கேட்டார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்

March 22, 2018 தண்டோரா குழு

பேஸ்புக்கில் முக்கிய பிரமுகர்களின் தனி நபர் தகவல்கள் திருடப்படுவதை ஒப்புக்கொண்டார் நிறுவனர் மார்க்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது,கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், ஃபேஸ்புக்கில் இருந்து 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடி, டொனால்டு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற உதவியதாக செய்திகள் வந்தது.இதனையடுத்து கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அலுவலர் (சி.இ.ஓ)அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் திருடப்பட்டிருப்பது உண்மை தான்.பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் கடமை பேஸ்புக் நிறுவனத்திற்கு உண்டு.இருப்பினும், தகவல்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.மேலும்,தகவல்களை பாதுகாக்கும் கடமையை செய்ய முடியாவிடில் மக்களுக்கு சேவையாற்றும் தகுதி எங்களுக்கு இல்லை என்று கூறினார்.

மேலும் படிக்க