• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மன்னித்துவிடு ஆசிஃபா இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை -கமல்

April 13, 2018 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் சிறுமி ஆசிஃபா படுகொலைக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த சிறுமியை கோவிலுக்குள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சிறுவன்,அரசு ஊழியர் உள்பட 7 பேர் மயக்க மருத்து கொடுத்து 3 நாட்கள் தொடர்ந்து வன்புணர்வு செய்துள்ளனர்.இறுதியில் அந்த சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.

ஆசிஃபாவின் படுகொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிஃபாவை கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அந்தச் சிறுமி உங்களுடைய சொந்த மகள் என்ற புரிதல் கூட ஏற்படவில்லையா. அவள் என்னுடைய மகள் இல்லை,ஆனால் ஒரு மனிதனாக,தந்தையாக,குடிமகனாக ஆசிஃபாவை பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருகிறது.மன்னித்துவிடு ஆசிஃபா இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை. உன்னுடைய நீதிக்காக நான் போராடுவேன்,குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது உன்னைப் போன்ற நிலை எந்த குழந்தைக்கும் வராமல் இருக்க போராடுவேன்.உனக்காக துயரப்படுகிறேன்,என்றுமே உன்னை மறக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க