• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை – சென்னை உயர்நீதி மன்றம்

June 15, 2017 தண்டோரா குழு

ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என்று தமிழக அரசு எழுப்பிய சந்தேகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவு தொடர்பாக தமிழக அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.அதில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதிக்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட மனைகளை மறுபதிவு செய்ய தடை ஏதும் இல்லை என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி கட்டுமானம் செய்து கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பத்திரபதிவு தடை அமலில் ( 9/9/2016 முதல் 28/03/2017 வரை ) இருந்த போது நடந்த பதிவான மனைகளுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க