• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க கண்டன ஆர்ப்பாட்டம்

March 27, 2018 தண்டோரா குழு

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று(மார்ச் 27)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக பல வருடங்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.ஆனால் மனிதர்களை,  கழிவுகளை அகற்ற பயன்படுத்துவதில்லை என அரசு பொய்யான தகவலை தெரிவித்து வருவதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மனித கழிவுகளை மனிதன் அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க கேரளாவைப்போல் ரோபோக்களை பயன்படுத்த வலியுறுத்தினர்.பாதாள சாக்கடை மரணங்களை தடுத்து நிறுத்த,கழிவு நீர் சுத்தம் செய்யும் மனிதர்களை ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்திட வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க