• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்

September 7, 2017 தண்டோரா குழு

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன் அதிகார பூர்வமாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக கடந்த 3ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது.
இதில் வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிடம், பாதுகாப்புத்துறை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்.

தற்போது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகியுள்ளார் நிர்மலா சீதாராமன். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகியுள்ள முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன்.மேலும் இந்திரா காந்தி பிரதமர் பதவியுடன் பாதுகாப்பு துறையையும் வைத்திருந்தார். ஆனால் முதல் முறையாக பாதுகாப்புத் துறை ஏற்றுள்ள பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க