February 1, 2021
கடினமான சூழலில் மிகச்சிறப்பான பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
2021 – 22 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கடினமான சூழலில் மிகச்சிறப்பான பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி தெரிவித்துள்ளாதாவது,
கடினமான சூழலில் மிகச்சிறப்பான பட்ஜெட் என்றும், இன்றைய பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறது, நாட்டின் வளர்ச்சியை இந்த பட்ஜெட் உறுதிப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.