August 28, 2020
தண்டோரா குழு
கோவையில் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எஸ் டி பிஐ கட்சி நடத்தும் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா கோவில் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ,சுற்றுச்சூழல் தக்க மதிப்பீடு அறிக்கை மற்றும் கிரிமினல் சட்டங்களின் ஆபத்தான திருத்தங்கள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ள சட்டத்திருத்ததை மத்திய அரசு கைவிடக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை சாய்பாபா கோவில் அருகிலுள்ள புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.