• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசிற்கு சிரஞ்சி ஊசிகளை அனுப்பிய தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்..!

July 15, 2021 தண்டோரா குழு

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு சிரஞ்சி ஊசிகளை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் அவ்வப்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தநிலையில் கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காலி சிரஞ்சி ஊசிகளை மத்திய அரசுக்கு அனுப்பி தமிழகத்திற்கு அதிகளவு தடுப்பூசிகளை ஒதுக்கி தரும்படி வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க