• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை

July 31, 2017 தண்டோரா குழு

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க மத்திய தொழிற்பாதுகாப்பு படை அனுமதி அளித்துள்ளது.

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க மத்திய தொழிற்பாதுகாப்பு படை அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எடுத்து வந்த தொடர் முயற்சியின் பலனாக, மதுரை மக்களின் நீண்ட நாள் கனவும் மதுரை வர்த்தக தொழில் கூட்டமைப்பின் கோரிக்கையுமான டெல்லி- மதுரை-சிங்கப்பூர் இடையே விமான சேவைக்கான ஒப்புதலை மத்திய தொழில் பாதுகாப்பு படை வழங்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் எனது சார்பாகவும்,மதுரை மக்களின் சார்பாகவும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க