• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு – தேர்தல் அதிகாரி

March 18, 2019 தண்டோரா குழு

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

17-வது நாடாளுமன்றத் தேர்தல்இந்தியா முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அதேநாளில் மதுரையில் பிரதிப்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால், தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. வாக்குப்பதிவு சதவீதம் குறையும் என்றும் அதனால் தேர்தல் தேதியை மாற்றி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தது.

இந்நிலையில், மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க