• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

October 6, 2017 தண்டோரா குழு

மதுரையில் அக்டோபர் 8 ஆம் தேதி RSS தரப்பில் நடைபெறவிருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

மதுரையில் நாளை மறுநாள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கோரிபேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,” விஜயதசமி மற்றும் RSSந் அமைப்பு தினத்தை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி, மாலை 5 மணி முதல் 6 மணி வரை மதுரை ஆர்.ஆர்.மண்டபத்திலிருந்து, அண்ணாநகர் சுகுனா ஸ்டோர்ஸ் வரை பேண்ட் இசை வாத்தியத்துடன், ஊர்வலமாக செல்லவும், பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தோம். அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் இதற்கான அனுமதியை மறுத்து நேற்று உத்தரவிட்டுள்ளார். எனவே அமைதியான முறையில் நடைபெறும் கூட்டத்தித்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.நீதிபதி சுந்தர் முன்பாக இந்த வழக்கை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

அப்போது காவல்துறை தரப்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருக்கும் பகுதியில் அதிக மருத்துவமனைகள் உள்ளன. பேண்ட் வாத்தியத்துடன் செல்வதால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாவர். மேலும் இதற்கு முன்பாக ஆர் எஸ் எஸ் தரப்பில் பேரணி நடத்த நீதிமன்றத்தில் அனுமது பெறும் நிலையில் தற்போது எவ்வித அனுமதியும் பெறவில்லை. ஆகவே அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர், மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையருடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி முடிவெடுக்கவும், அதனை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க