• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுபானக் கடையை மூட வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம்

November 11, 2019

24 மணி நேரமும் படு ஜோராக கள்ளத்தனமாக விற்று வரும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்ததால் கோவை அருகே உள்ள மாதம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கே மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது, அந்த கடையை மூட கோரி கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. மதுக்கடை நேரத்தையும் தாண்டி 24 மணி நேரமும் இக்கடையில் மது கிடைப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெரியவர்கள் இளைஞர்கள் முழுநேரமும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வரும் இந்த போக்கை கண்டித்து இதுகுறித்து பலமுறை மாவட்ட அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்களால் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாது மது விற்பனை கள்ளத்தனமாக படு ஜோராக நடந்து வருகிறது. எனவே இது போன்ற ஒரு சூழல் நீடித்தால் சமூகத்திற்கு பெரிய பிரச்சினையாக முடியும் என்பதனை அடிப்படையாக வைத்து மாதம்பட்டி இளைஞர்கள் ஒன்றிணைந்து மதுக் கடையை நிரந்தரமாக மூடும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக பெண்களும் பெரியவர்களும் களம் இறங்கியதால் கோவை அருகே உள்ள மாதம் பட்டியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க