• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுக்கடையை மூடக்கோரி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

November 18, 2019

கோவை மாதம்பட்டியில் உள்ள மதுபான கடையை மூடக்கோரி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாதம்பட்டியில் அமைந்துள்ளது அரசு மதுபானக்கடை. இம்மதுபான கடை 24 மணி நேரமும் இயங்கி வருவதாக புகார் எழுந்தது. இங்குள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். மாணவர்களின் இப்போராட்டத்தில் தொடர்ந்து பொதுமக்களும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மாதம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசு மதுபானக் கடையை அகற்ற கடந்த மூன்று வருடமாக போராடி வருவதாக தெரிவித்த இளைஞர்கள், இதற்கு மேலும் மதுபானக்கடை அகற்றப்படவில்லையெனில் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க