May 7, 2020
தண்டோரா குழு
மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்கிட வேண்டும். வேலையின்றி, வருவாயின்றி வீட்டில் முடங்கிக்கிடக்கும் உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச இருப்பைக்கூட பறிப்பதற்கு மதுக்கடைகளை திறந்துவைத்த மாநில அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்ஒருபகுதியாக கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி,மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.