• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதிய உணவு வேளையின் போது கூடுதல் வகுப்பறைகளை ஒதுக்கீடு செய்ய ஆட்சியர் உத்தரவு

September 1, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ராமநாதபுரத்திலுள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 9,10,11,12-ம் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.அதே போல் கல்லூரிகளும் துவங்கப்பட்டுள்ளன.இதனிடையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசு வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகளில் பெஞ்சுகளை அமைத்து, 6அடி இடைவெளியில் அவர்களை உட்கார வைக்கவும், அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வகுப்பறைகளில் மாணவியர்கள், சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டிருப்பதையும் நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார்.

உணவு இடைவேளை மற்றும் பாடவேளையின் போது மாணவியர்கள் உரிய இடைவெளியுடன் சென்று வருவதை கண்காணிக்கவும், தினசரி மாணக்கர்களின் வருகைப் பதிவேட்டில் வருகை பதிவினை முறையாக பராமரித்து வாராந்திர ரீதியாக மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கவும் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மதிய உணவு வேளையின் போது கூடுதல் வகுப்பறைகளை ஒதுக்கீடு செய்து, ஒரே இடங்களில் அதிக நபர்கள் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இவ்ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, வருவாய் கோட்டாட்சியர் செந்திலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க