• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மண்டல அலுவலகங்களில் உள்ள கொரோனா கட்டுபாட்டு அறைகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

May 16, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மண்டல
அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறைகளில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சி.எம்.சி. காலனி,
வெரைட்டி ஹால் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், அங்குள்ள பொதுமக்களிடம் அனைவரும் தவறாது கொரோனா மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.பின்னர், மேற்கு மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும்பணிகளை மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டார்.

அதே போல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட கோவைப்புதூரில்அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவ முகாம் மற்றும் தெற்கு, வடக்கு மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையினை
பார்வையிட்ட பின்னர், அங்குள்ள பொதுமக்களிடம் அனைவரும் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், முகக்கவசம் கட்டாயம்
வேண்டும், சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி கமிஷனர் தமிழ்ச்செல்வன்,மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க