• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ – ஸ்டாலின்

May 2, 2017 தண்டோரா குழு

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன் வரவேண்டும் என்று தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக அரசின் நிர்வாகம் அனைத்து மாவட்டங்களிலும் முடங்கி நிற்கின்ற நேரத்தில், 73 நாட்களில் ஆயிரத்து 570 கோப்புகளில் கையெழுத்திட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

கோப்புகளில் கையெழுத்து போடுவது முதலமைச்சரின் கடமைகளில் ஒன்று. இவ்வளவு கோப்புகளில் கையெழுத்து போட்டதாகக் கூறும் முதலமைச்சர் எத்தனை முக்கிய திட்டங்களுக்கு அந்த கோப்புகளின் மூலம் அனுமதி கொடுத்திருக்கிறார்?

முதலமைச்சருக்கு வரும் வழக்கமான கோப்புகளில் கையெழுத்து போட்டதை எல்லாம் கணக்கு போட்டு, முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாக இமேஜை செயற்கையாக தூக்கி நிறுத்தும் நோக்கோடு முதலமைச்சர் பேசியிருப்பது வெறும் விளம்பரத்திற்கு உதவுமே தவிர, ஆக்கப்பூர்வமான அரசு நிர்வாக செயல்பாட்டுக்கு நிச்சயம் உதவாது.

அ.தி.மு.க., ஆட்சியில் அழுகிப் போன அரசு நிர்வாகத்தை இதுபோன்ற பகட்டான பேச்சுகள் மூலம் மறைக்க முயலாமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதலமைச்சர் தமது கையெழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.”

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க