• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ – ஸ்டாலின்

May 2, 2017 தண்டோரா குழு

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன் வரவேண்டும் என்று தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக அரசின் நிர்வாகம் அனைத்து மாவட்டங்களிலும் முடங்கி நிற்கின்ற நேரத்தில், 73 நாட்களில் ஆயிரத்து 570 கோப்புகளில் கையெழுத்திட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

கோப்புகளில் கையெழுத்து போடுவது முதலமைச்சரின் கடமைகளில் ஒன்று. இவ்வளவு கோப்புகளில் கையெழுத்து போட்டதாகக் கூறும் முதலமைச்சர் எத்தனை முக்கிய திட்டங்களுக்கு அந்த கோப்புகளின் மூலம் அனுமதி கொடுத்திருக்கிறார்?

முதலமைச்சருக்கு வரும் வழக்கமான கோப்புகளில் கையெழுத்து போட்டதை எல்லாம் கணக்கு போட்டு, முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாக இமேஜை செயற்கையாக தூக்கி நிறுத்தும் நோக்கோடு முதலமைச்சர் பேசியிருப்பது வெறும் விளம்பரத்திற்கு உதவுமே தவிர, ஆக்கப்பூர்வமான அரசு நிர்வாக செயல்பாட்டுக்கு நிச்சயம் உதவாது.

அ.தி.மு.க., ஆட்சியில் அழுகிப் போன அரசு நிர்வாகத்தை இதுபோன்ற பகட்டான பேச்சுகள் மூலம் மறைக்க முயலாமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதலமைச்சர் தமது கையெழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.”

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க