• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களுக்கு உணவு அளிப்பதிலும் இதே ஆற்றலை காட்டுங்கள் -அரவிந்த் சாமி

June 2, 2017 தண்டோரா குழு

நாடு முழுவதும் சந்தைகளில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ‘மாட்டிறைச்சித் திருவிழாக்களும்’ நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நடிகர் அர்விந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,

உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிக அளவு உள்ள நாடுகளில் இந்தியாவும் ஓன்று. ஆனால், நாம் இன்னமும் மேஜை மீது உள்ள உணவை பறிக்கும் வேலையை தான் செய்து வருகிறோம். இதே ஆற்றலை மக்களுக்கு உணவு அளிப்பதிலும் காட்டுங்கள்.அதை தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன என கூறியுள்ளார்

மேலும் படிக்க