December 31, 2019 தண்டோரா குழு
தன் மகளை சமூக வலைதளங்களில் தவறாக சித்தறித்து வருவதாகவும், மகனுடன் சேர்த்து வைத்து தன்னை தவறாக பேசுவதாகவும் கூறி நடிகர் விஷால் மீது ‘மீ-டூ’ புகார் கொடுத்த பெண் ஒருவர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் விஸ்வதர்ஷினி. இவருக்கு திருமண வயதில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் விஷால் மீது மீடூ புகார் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவர் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில், தன்னையும், தனது மகன் மற்றும் மகளையும் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருவதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த சூழலில், மகளை பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும், மகனுடன் சேர்த்து வைத்தி அசிங்கப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.