August 22, 2019 தண்டோரா குழு
ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னால் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,, சர்வாதிகார நடவடிக்கைகள் மூலமாக சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,.மத்திய பாஜக அரசு, தனது கைப்பாவையாக மத்திய புலனாய்வுத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சிதம்பரத்தை கைதுசெய்திருப்பதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் கோசங்கள் எழுப்பினர்.