• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க CBI-க்கு நீதிமன்றம் அனுமதி!

August 22, 2019 தண்டோரா குழு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ கோரியபடி 5 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்தது. இதற்கிடையில், இன்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல், ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில், சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதற்காக சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். சிதம்பரம் சார்பில், கபில்சிபல், அபிஷேக் சிங்வியும், சிபிஐ சார்பில் துஷார் மேத்தாவும் ஆஜரானார்கள். சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், குடும்பத்தினர் தினமும் சிதம்பரத்தை 30 நிமிடம் சந்திக்கவும் அனுமதி வழங்கினார். மீண்டும் வரும் ஆக., 27(திங்கட்கிழமை) ஆஜர்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து சிதம்பரத்தை ஒரு வெள்ளை நிற காரில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். மேலும் சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்தது. சிதம்பரத்தை சிபிஐ அலுவலகத்துக்கு உடனடியாக அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க