• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ளூ வேல் விளையாட்டால் மதுரை மாணவர் தற்கொலை

August 31, 2017 தண்டோரா குழு

ப்ளு வேல் கேம் விளையாட்டால் மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளூ வேல் எனப்படும் விபரீத விளையாட்டால் தொடர்ந்து பல உயிர்கள் பலியாகி வரும் நிலையில்,தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் இந்த விளையாட்டு மூலம் உயிரிழந்துள்ளார்.

புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, 50 சுற்றுகள் கொண்ட விளையாட்டில்,தங்களை படிப்படியாக துன்புறுத்திக் கொள்ள வேண்டும்.இறுதியில் ஏதேனும் ஒரு வகையில் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த விளையாட்டின் விதிமுறை.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தகவல் அறிந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவரது வலது கையில் திமிங்கலத்தின் உருவத்தை வரைந்திருந்தார். மேலும் அவரது நோட்டுப்புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த புளுவேல் விளையாட்டு தான்,அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ப்ளு வேல் கேம் விளையாடும் இளைஞர்களை காப்பாற்ற, ப்ளு வேல் கேம் விளையாட்டால் உயிரிழந்த மதுரையை சேர்ந்த விக்னேஷின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க