• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ரியா வாரியார் மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

February 20, 2018 தண்டோரா குழு

புதுமுக நடிகை ப்ரியா வாரியர் தம் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி  தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

அறிமுக நாயகி பிரியா பிரகாஷ் வாரியர்‘ஒரு அடார் லவ்’என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்ய மலரய பூவி’ (முத்துப் பூவை போன்ற பெண்) என்ற பாடலில் பிரியா வாரியர் சக மாணவரை பார்த்து கண் சிமிட்டும் காட்சி உள்ளது. அக்காட்சியில் கண்ணசைவு மூலம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பிரியா வாரியர் ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்றார்.

இதற்கிடையில், அந்த பாடல் வரிகள் தங்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டதாக கூறி தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நடிகை பிரியா வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரியா வாரியர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் நீதிபதிகள் பிரியா வாரியர் மனுவை நாளை விசாரிப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்க