May 19, 2023
தண்டோரா குழு
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்( வயது 42). தனியார் நிறுவன ஊழியர். மேலும் இவர் சிம் கார்டுகளை ரோட்டோரத்தில் வைத்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் செந்தில்குமார் போலி முகவரி மற்றும் வேறொருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி 254 சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.
இதனை பார்த்த தொலைதொடர்பு நிறுவனம் இது குறித்து சென்னையில் உள்ள கூடுதல் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இந்த வழக்கு கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் போலி முகவரி மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிம் கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த செந்தில்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.