• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போத்தனூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ள நீர்

August 5, 2020 தண்டோரா குழு

கோவையில் பெய்து வரும் கனமழையில் போத்தனூர் அருகே செல்லும் நொய்யல் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது.

கோவையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு குனியமுத்தூர்,ஆத்துப்பாலம், போத்தனூர் பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நீர் ஆர்பரித்து செல்கிறது. இதில் போத்தனூர் ஜம்ஜம்நகர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட லேசான உடைப்பால் வெள்ள நீர் குடியிருப்பிற்குள் புகுந்தது.இதனால்
போத்தனூர் சாய்நகரில் உள்ள 13 தெருக்களில் 10 தெருக்களுக்கு தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சரி செய்வதாக தெரிவித்தனர். அதற்காக மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் படிக்க