• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

August 6, 2019 தண்டோரா குழு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும்,மாநில அரசு மீட்டர் கட்டண உயர்வை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகுமாரன் பேசுகையில்,

2 முறை போக்குவரத்து சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயன்று போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நிறுத்தி வைக்கபட்டது. தற்போது பெருபான்மையுடன் பா.ஜ.க அரசு வெற்றி பெற்ற காரணத்தினால் சட்ட திருத்த மசோதவை அமல்படுத்தி உள்ளது. இது போக்குவரத்து தொழிலாளர்களை கார்பரேட் முதலாளிகளிடம் அடமானம் வைப்பது போல என தெரிவித்தார். மேலும் தினமும் 200,300 ரூபாய் வருமானம் ஈட்டவே சிரமமாக உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த சட்ட திருத்த மசோதா தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிப்பதாக இருப்பதாக தெரிவித்தார். மாநில அரசும் ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்தாமல் கால தாமதம் செய்து வருவதாக கூறியவர் முறையான கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கட்டண முறை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளதாகவே சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் ஆட்டோ தொழிலாளர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்போது தெரிவித்தார்.

மேலும் படிக்க