• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போக்குவரத்து ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

December 27, 2019 தண்டோரா குழு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் அதிகாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்களின் கூட்டு கமிட்டி சார்பில் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று காலை 4 மணி முதல் 5 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாலையில் 30க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் மேற்கொண்டனர்.கூட்டு கமிட்டி சார்பில் கோவை மண்டலத்தில் 19 போக்குவரத்து பணிமனைகளில் இந்த மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெறுவதாகவும்,தொடர்ச்சியாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பங்களிப்பு இருக்கும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க