March 15, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று முதல் பொள்ளாச்சி முகாமிட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.நேற்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஆய்வு செய்த சிபிசிஐடி காவல்துறையினர்இரண்டாவது நாளாக இன்று மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கு இன்று வந்த சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் உள்ளிட்ட காவல்துறையினர் வீட்டிலிருந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையில் வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய தடயமாக இருந்த லேப்டாப் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக திருநாவுக்கரசிடம் நட்பாக பழகிய நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வதாக தெரிகிறது. திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய சோதனையில் போது அக்கம் பக்கத்தினர் திரண்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.