• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – மூவருக்கும் வருகின்ற 3ம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

January 20, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ போலிசார் கைது செய்த அருளானந்தம், பாபு, ஹெரைன்பால் ஆகிய மூவருக்கும் வருகின்ற 3ம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் வைக்க கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு திருநாவுக்கரசு,சபரிராஜன்,சதீஸ்,வசந்தகுமார்,மணிவண்ணன் ஆகிய ஐந்துபேர் கைது செய்யபட்டு சேலம் மத்திய சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் முருகானந்தம், ஹெரைன்பால், பாபு ஆகிய மூன்று பேர் கடந்த 6-ம் தேதி கைது செய்யபட்டு கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.

இதனையடுத்து மூவரையும் 15-நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மூவரும் கோபி கிளை சிறையலடைக்கப்பட்டனர். இந்நிலையில் மூவரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மூவரும் பாதுகாப்பு கருதி காணொளி காட்சி மூலம் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூவரின் நீதிமன்ற காவலையும் வரும் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யபட்ட மூவருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய சிபிஐ தரப்பில் மனுதாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி மூவரும் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க