April 11, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை, அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருநாவுக்கரசர், சதீஷ்குமார், வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனிடையே, சென்னை அறிவுரைக் கழகத்தில் 4 பேரும் ஆஜரப்படுத்தப்பட்டனர். அவர்களிடம், அறிவுரைக் கழக தலைவர் ராமன் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.