• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: 4 பேருக்கும் உறுதியானது குண்டாஸ்

April 11, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை, அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருநாவுக்கரசர், சதீஷ்குமார், வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனிடையே, சென்னை அறிவுரைக் கழகத்தில் 4 பேரும் ஆஜரப்படுத்தப்பட்டனர். அவர்களிடம், அறிவுரைக் கழக தலைவர் ராமன் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க