• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – சக மாணவர் மீது வழக்கு பதிவு

September 5, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மாணவர் மீது இரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி (21) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 29ம் தேதி கல்லூரியில் இருந்து 36 மாணவர்கள்,6 மாணவிகள், 2 ஆசிரியர்கள் உட்பட 44 பேர் மங்களூருக்கு தொழில் சுற்றுலாவுக்காக சென்றனர். கோவை இரயில் நிலையத்தில் இருந்து மங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றதாகவும், அப்போது, சக மாணவனான தங்கபாலன்(21) நெருக்கமாக வந்து பக்கத்தில் நிற்பதும், மேலே வந்து உராசுவதும் இதுகுறித்து எச்சரித்தும் பின்னர், மங்களூரில் பேருந்தில் பயணித்த போதும் இதுபோன்ற செயலில் ஈடுப்பட்டதாகவும், மீண்டும் 3-ம் தேதி கோவைக்கு வரும் வழியில் தங்கபாலன் மதுபோதையில் தவறாக நடந்து கொண்டதாகவும் மாணவி டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்த போது, தங்கபாலனை கண்டித்து சொரனூர் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவி கோவை ரயில்வே இருப்புபாதை காவல்துறையினர் புகார் கொடுத்துள்ளார்.மாணவி அளித்த புகாரின் பேரில் ரயில்வே காவல்துறையினர் தங்கபாலன் மீது மானபங்க முயற்சி, பெண் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கு மங்களூர் போலிசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க