• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி

March 13, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே கெடிமேடு என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(44), லதா(35), சித்ரா(40), சுமதி(46), தாரணி(10) பூஜா(8) ஆகியோர் குடும்பத்துடன் பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு
பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை பிரகாஷ் ஒட்டி வந்துள்ளார்.

நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் கெடிமேடு பிஏபி பிரதான கால்வாயில் இடது புற கால்வாயின் தடுப்புசுவரின் மீது கார் மோதி பிஏபி கால்வாயில் விழுந்து கால்வாயில் இருந்த தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கால்வாயின் வலதுபுறத்தில் கார் குப்புற கவிழ்ந்தது. இதில், 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து, உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு படையினர் வால்பாறை துணை கண்காணிப்பாளர் கோமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் இருந்து கிரேன் மூலம். காரை மீட்டு உடலை பிரதேபரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க