• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது

September 1, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபச்சாரங்கள் நடக்கா வண்ணம் தனியார் லாட்ஜ்,ரெசார்ட் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு காவல் நிலையத்தில்அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சூளேஸ்வரன்பட்டி பேருந்து நிலையத்தில் நிற்கும் பொழுது விஜயலட்சுமி என்ற பெண் விபசாரத்துக்கு அழைத்ததாக புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சூளேஸ்வரன்பட்டி நாய்க்கன்பாளையம் அன்னை நகர்ப் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் தனது தோழிகளுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது.

இதையடுத்து விஜயலட்சுமி, பன்பரசி, கோமதிமூவரையும் விபச்சார வழக்கில் கைது செய்து நீதிமன்றம் 1ல்ஆஜர்படுத்தி கோவை 3 பெண்களை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க