• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து மிரட்டிய ஐந்து இளைஞர்கள் கைது

June 25, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்க கூறி மிரட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த முகமது கபீர், இவர்களது நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் இவர்கள் 5 பேரும் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறித்து செல்போன்களில் படம் பிடித்து காதலிக்க சொல்லி தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் மாணவிகளின் புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து முகமது ரியாஸ் வசந்தகுமார் முகமது அந்த், கமருதீன் முகமது கபீர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் பள்ளி மாணவிகளை மிரட்டிதோடு தட்டிக் கேட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால் இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமது சபீர் மீது மட்டும் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவிகளை புகைப்படங்கள் எடுத்து மிரட்டி சமூக வலைத்தளங்களில் வாலிபர்கள் வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க