April 5, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் திடீரேன ஏற்பட்ட சூறாவளி சுழலால் மக்கள் அச்சமடைந்தனர்.
பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் முன் நேற்றுமுன்தினம் மாலை நேரம் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் திடீர் என்று சூறாவளி சுழல் சிறிய அளவில் ஆரம்பித்து மளமளவான வானத்தை முட்டும் அளவிற்க்கு சுழல் சுழன்றது. பாம்பு போல் மேலே சென்றதை கண்டு பொதுமக்கள் அச்சத்துடனும், ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதையடுத்து காற்றின் வேகம் திசை மாறியதால் சுழல்கலைந்து போனது. இதை மொபைலில் படம் பிடித்த பொதுமக்கள் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் பதிவு செய்தும் பகிரபட்டு லைக்குகள் அள்ளுகிறது. இம்மாதிரியான சுழலுக்கு ஆங்கிலத்தில் டெர்னேடோ என பெயர் தமிழில் சூறாவளி எனப் பெயர். இம்மாதிரியான சுழல் அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் அதிகம் ஏற்படும் கடந்த சில தினங்கள் முன்பு பொள்ளாச்சி போக்குவரத்து அலுவலகத்தில் இது போன்ற சூறவாளி ஏற்பட்டது குறிப்பிடதக்கது.