• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுபிரிவினருக்கு 1௦% இடஒதுக்கீடு; எதிர்கட்சிகள் அமளி; மாநிலங்களவை ஒத்திவைப்பு!

January 9, 2019 தண்டோரா குழு

பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் இருக்கும் பொதுப்பிரிவு மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பொதுப்பிரிவு மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, மக்களவையில் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டது. நேற்றுடன் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது என்றபோது, இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வதற்கு மாநிலங்களவை அமர்வு ஒருநாள் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அவை கூடியபோது, மாநிலங்களவை அமர்வு நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கிடையில், இடஒதுக்கீட்டு மசோதாவை மத்திய சமூகநலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அமைச்சரின் பேச்சுக்கு இடையே அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க