September 16, 2019 தண்டோரா குழு
பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என்று நினைக்கிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழ் மொழி விவகாரம் பற்றி பேச விரும்புகிறேனே தவிர சுப்பிரமணிய சுவாமி பற்றி பேச விரும்பவில்லை.பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என்று நினைக்கிறேன்.எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார்; இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்றார்.
புதிய கல்விக்கொள்கை, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு,அரசியல் கட்சியை விட மாணவர்களிடம் கேட்டால் இதற்கான விளக்கம் கிடைத்துவிடும்.5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் இடைநிற்றல் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.