• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தள்ளு வண்டிக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

July 28, 2023 தண்டோரா குழு

கோவை மணியக்காரம்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தள்ளு வண்டிக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தள்ளுவண்டியில் வைத்திருந்த உணவகத்தை,கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் உத்தரவிரன் பேரில் அகற்றியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் ரங்கநாதன் என்பவர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக்கழிப்பிடம் அருகே ஆக்கிரமிப்பு செய்து தள்ளுவண்டி கடை நடத்தி வந்ததாகவும், இரவு நேரங்களில் அங்கு கடை நடத்தாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வருவதாகவும்,இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்தும் பெண்கள் பாதிக்கப்படுவதாக, நாங்கள் வடக்கு மண்டல தலைவரிடம் புகார் அடிப்படையில் தள்ளு வண்டியை பறிமுதல் செய்ததாகவும், ஆனால் மேயர் மற்றும் மேயரின் கணவர் மீது தவறான செய்திகளை பரப்பி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க