March 26, 2019 தண்டோரா குழு
குக்கர் சின்னம் மறுக்கப்பட்ட நிலையில் பொது சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மனு அளித்துள்ளார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் குக்கர் சின்னத்தை அமமுகவிற்கு ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தேர்தலில் தங்கள் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து விரைவில் முடிவெடுக்க உள்ளது.