• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – டிடிவி தினகரன்

September 1, 2017 தண்டோரா குழு

எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நபா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் தொிவித்துள்ளாா்.

அதிமுகவில் இ.பி.எஸ் அணியினரும், ஓ.பி.எஸ் அணியினரும் இணைந்ததை தொடா்ந்து டி.டி.வி.தினகரன் தலைமையில் 19 சட்டமன்ற உறுப்பினா்கள் தனி அணியாக பிாிந்தனா்.

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, இது கட்சி சம்பந்தப்பட்ட வி‌ஷயம் என்று கூறி மறுத்து விட்டார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வில் வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடா்பாக இன்று காலை டிடிவி தினகரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிவிப்பில், எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள பொதுக்குழுவிற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க.வின் சட்டதிட்டத்தின் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

மேலும்,இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் யாரும் பங்கேற்க கூடாது மீறும் நபா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் தொிவித்துள்ளாா்.

மேலும் படிக்க