• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தபெதிக அமைப்பினர்

December 4, 2020 தண்டோரா குழு

டாகடர்.பாலசுந்தரம் சாலையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்தை தபெதிக அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரப்ப்பான சூழல் நிலவியது.

வெறும் 15 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழிக்கு 1000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி இருக்கின்றது எனவும் இது தேவையற்றது எனவும் தெரிவித்தனர். சமஸ்கிருத மொழியில் செய்தி்வாசிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்
போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக அமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க