January 2, 2019 தண்டோரா குழு
பொங்கல் போனஸ் வழங்க கோரி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை டாடாபாத் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஒய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்ணா போராட்டம் நடத்தினர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஒய்வுபெற்ற ஊழியர்களுக்கு பொங்கல் போனாஸ் வழங்க கோரியும், குறைந்தபட்ச ஒய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாயும், குடும்ப ஒய்வூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்த தர்ணா போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட பேரிடும் எனவும் எச்சரித்தனர்.