• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் பரிசை வரும் 14-ஆம் தேதிக்குள் வாங்காவிட்டால் அதன் பின் கிடைக்காது

January 9, 2019 தண்டோரா குழு

பொங்கல் பரிசை 14-ந்தேதிக்குள் வாங்காவிட்டால் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் முலம் ரூ.258 கோடி ரூபாயில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே ஊருக்கு செல்வதால் 6 நாள் விடுமுறை முடிந்து வந்து பொங்கல் பொருட்களை வாங்கி கொள்ளலாமா? என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பை 7-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்குள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 13, 14-ஆம் தேதிகளில் விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று ரேஷன் கடைகளில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை.எனவே குறிப்பிட்ட தேதிகளில் அந்தெந்த பகுதி மக்கள் சென்று வாங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க