January 8, 2019 தண்டோரா குழு
பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14ந் தேதியை உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையில், 12ம் தேதி சனிகிழமையே பலரும் பொங்கல் பண்டிகைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், இடையில் 14ம் தேதி வேலை நாள் என்பதால் பலரும் செல்ல முடியாத சூழல் ஏற்படும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 14ந் தேதி உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக வரும் பிப்ரவரி 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி திங்கள் கிழமை விடுமுறையாக இருந்தால் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.