• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரூர் தற்காலிக தரைபாலத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை

October 30, 2019 தண்டோரா குழு

கோவை பேருர் நொய்யலாற்றில் அதிக வெள்ளம் காரணமாக தற்காலிக தரைபாலத்தை மக்கள் பயன் படுத்தமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலருகே உள்ளது பேரூர் பாலம். பேரூரையும், வீரகேரளம் மற்றும் வேடப்பட்டி போன்ற பகுதிகளை இணைக்கும் இந்த பாலத்தினை பொதுமக்கள் போக்குவதற்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கோவையில் கடந்த தென்மேற்கு பருவமழை காலங்களில் நொய்யாலாற்றில் அதிக வெள்ளபெருக்கு காரணமாக பாலத்தின் மேல் அதிகளவு வெள்ள நீர் சென்றதால் கடந்த பழைய பாலம் இடிக்கபட்டு புதியபாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக தரைபாலம் அமைக்கபட்டிருந்தது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து நொய்யலாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக தரைபாலம் அடித்து செல்லபட்டது.

இதனால் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் நொய்யலில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் தரைபாலத்தின் மேல் வெள்ள நீர் செல்வதால் பொதுமக்கள் அப்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் உடனடியாக பாலம் கட்ட வேண்டும் அதுவரை மாற்று பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க